2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

புதிய தேசிய கொடியைக் கொண்டுவர சிவாஜிலிங்கம் முயற்சி

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேசியக் கொடி ஒன்றை கொண்டுவருவதற்காக போராடவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக குறித்த புதிய தேசியக்கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தினால் நாட்டிற்குள் பிரச்சினைகள் ஏற்படாது என்றும் அவர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

ஒரு நாட்டினது தேசியக்கொடியானது சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக அமையவேண்டும் என்றும்,தற்போது உள்ள தேசியக்கொடியானது சிங்கள இனத்தையும்,பௌத்த மத்ததையும் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .