2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மூழ்கிய படகில் இருந்த இந்திய மீனவர்களைத் தேடுதல் மும்முரம்

Editorial   / 2021 ஜனவரி 21 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடி படகு மற்றும் அதிலிருந்த மீனவர்களைத் தேடும் பணிகள், இரண்டாவது நாளாகவும் நேற்று (20) முன்னெடுக்கப்பட்டன என, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில், அந்தப் படகு ஆழ்கடலுக்குள் முழுமையாக மூழ்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள, இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, அந்தப் படகில் பயணித்த மீனவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார். 

அதில் பயணித்தவர்களைத் தேடும் நடவடிக்கைகளில், கடற்படையின் சுழியோடிகள் முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவித்த அவர், விபத்துக்குள்ளாகி மூழ்கும் படகைத் தேடும் பணிக்காக, கடற்படைக்குச் சொந்தமான படகுகளும் கப்பலொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்புக்குள் ஜனவரி 18 இரவு சட்டவிரோதமாக நுழைந்த, 50க்கும் அதிகமான இந்திய மீன்பிடிப் படகுகள் யாழ்ப்பாணம்,  நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படை குறிப்பிடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .