Editorial / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு உரத்துச் செல்வதில் வெற்றியடைந்துள்ளார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டுமானம் தொடர்பில், அம்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அவர் தவறியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனது இல்லத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவரால் எழுப்பட்ட வினா ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்ட கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், பயங்கரமான ஒடுக்குமுறைக்குள் வடக்கு மக்கள் இருந்தபோது, விக்னேஸ்வரன் கொண்டிருந்த ஆளுமையும் அவர் குறித்துச் சர்வதேசத்துக்கு இருந்த எண்ணத்தையும் உபயோகித்து, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் என, சுமந்திரன் எம்.பி பாராட்டினார்.
எனினும், அபிவிருத்தி தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்த அவர், "மாகாண சபையின் போதாத அதிகாரங்களைக் கூட, சரியாக உபயோகித்து, போரால் எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று மக்கள் கொடுத்த ஆணையை, முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண சபை, எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை" எனக் குறிப்பிட்டார்.
23 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
3 hours ago