2026 பெப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை

‘ரணில்- கரு இணக்கபாட்டுக்கு வரவேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 03 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பிரபலமடைந்துள்ளவர்  அமைச்சர் சஜித் பிரேமதாச எனத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, இவரை வெற்றியடையச் செய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும்  இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது அபிப்ராயத்துக்கமைய, அமைச்சர் சஜித் பிரேமதாசவே பிரபல்யமடைந்துள்ளார். அவருக்கு தான் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மறு பக்கம் யார் வந்தாலும், எந்த ராஜபக்ஸ வந்தாலும் குடும்பத்துக்குள்ளே சங்கீத கதிரை ​போட்டியாக அது மாறும். எது எப்படியோ அமைச்சர் சஜித்தை வெற்றிப் பெறச் செய்வதற்கான வழி எமக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X