Editorial / 2020 மார்ச் 18 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான விசாக்களும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, செல்லுபடியாகும் காலம், கடந்த 14 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டவர்கள் விசா கட்டணத்தை செலுத்தி, அதனை தமது வெளிநாட்டு கடவுச் சீட்டுகளில் முத்திரையிட்டு நீடித்துக்கொள்ள முடியும்.
அதற்காக ஏப்ரல் மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில், ஏதேனும் ஒரு தினத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுவிற்கு வருகைதர முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .