2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஷாபி விவகாரம்: ரத்தன தேரர் முறைப்பாடு

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சஹாப்தீன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறுவதில்லை என எழுத்து மூலம் முறைப்பாடொன்றை அத்துரலிய ரத்தன தேரர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் நேற்று (28) கையளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை அனுப்புமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அந்த அறிக்கையிலுள்ள விடயங்களுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .