2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

100 மாணவர்களுக்கு வலைவீச்சு

Yuganthini   / 2017 ஜூன் 26 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார்கள் மற்றும் அங்கிருந்த சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மாணவர்களில் சிலர், தங்களது சொந்த இடங்களைவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்காக, பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .