Super User / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமீலா நஜ்முதீன்)
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த, முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் முன்னாள் தலைவரான மங்கள சமரவீரவுக்கு கட்சியில் சிரேஷ்ட பதவியொன்று வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ஐ.தே.க. வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியானவுடன் மங்கள சமரவீரவுக்கு வழங்கப்படும் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் எனவும். அவர் தனது தொகுதி மக்களுக்கு சேவையாற்றக்கூடியதாக அப்பதவி இருக்கும் எனவும் ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தான் தலைவராக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவை கடந்த வாரம் கலைத்துவிட்டு ஐ.தே.கவில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago