Suganthini Ratnam / 2016 மார்ச் 24 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா, எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியா கடற்பரப்பில்; கைதுசெய்யப்பட்ட 17 மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளில் திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஐh புதன்கிழமை (23) விடுவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் ஆறாம், எட்டாம் திகதிகளில் இவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
சட்டவிரோதமான மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கிண்ணியா கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 மீனவர்களை செவ்வாய்க்கிழமை (22) மாலை கடற்படையினர் கைதுசெய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் கைப்பற்றி துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட படகுகளும் மீன்பிடி வலைகளும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago