Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்க தலைவர் இரா.ஜெயமோகன் தெரிவித்தார்.
திருக்கோணமலை, கிண்ணியா. மூதூர், குச்சவெளி, போன்ற பகுதிகளில் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .