Editorial / 2019 நவம்பர் 29 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
நாட்டில் மிக வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முகமாக, அதுபற்றி தெளிவூட்டும் செயலமர்வு, மூதூர் பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில், இன்று (29) நடைபெற்றது
மூதூர் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில், சுகாதார பரிசோதகர் மொஹமட் றினோஸ் கலந்துகொண்டு, டெங்கு ஒழிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி தெளிவூட்டினார்.
இந்தச் செயலமர்வில், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .