Princiya Dixci / 2016 ஜூலை 13 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெனிதெனியவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறியும் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸும், பேராதனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்றுப் புதன்கிழமை (13) அதிகாலை 05 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், படுகாயமடைந்த லொறியின் சாரதியும் பஸ்ஸின் சாரதியும், கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்தில் லொறி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


(படப்பிடிப்பு: செனரத் பண்டார)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .