Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 31 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்தின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், சமர்செட் அணி சார்பாக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், கிறிஸ் கெயிலுடன் இணைந்து அவர் விளையாடவுள்ளார்.
2014ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரை இலங்கை அணி வென்றபோது, முக்கியமான வீரராக இருந்த மஹேல, உலக இருபதுக்கு-20 தொடரின் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராவார். மறுபுறத்தில் கிறிஸ் கெயில், அத்தொடரில் வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவராவார்.
'மஹேல, சந்தேகப்படமுடியாத திறனைக் கொண்ட துடுப்பாட்ட வீரரொருவராவார். மைதானத்தில் அனைத்து முனைகளிலும் ஓட்டங்களைப் பெறக்கூடியவர். அவ்வாறான அனுபவமும் திறனும் கொண்டவர் கிடைக்கப்பெறும்போது, அவரைப் பிடித்துக் கொள்ள வேண்டும்" என, சமர்செட் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் மற் மேநார்ட் தெரிவித்தார்.
இந்தியன் பிறீமியர் லீக், பிக் பாஷ் லீக் போன்றவற்றில் பங்குபற்றிய மஹேல, கடந்தாண்டு இடம்பெற்ற இங்கிலாந்து உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், சசெக்ஸ் சார்பாக விளையாடியிருந்ததோடு, 34.12 என்ற சராசரியில் ஓட்டங்களைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago