Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாப்வேயுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சொய்ப் மலிக் 35 (24), மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காமல் 33 (32) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சமு சிபாப 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்ககளில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் எல்ட்டன் சிக்கும்புரா 31 (28), ஹமில்டன் மஸகட்ஸா 25 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், இமாட் வசீம் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக இமாட் வசீம் தெரிவானார்.
2 போட்டிகள் கொண்ட இத்தொடரில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
15 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
23 minute ago