2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை  பெற்றுள்ளார்.

இந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார்.

இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • muhmeen Sunday, 11 November 2012 05:14 PM

    சாதனை என்னும் மரத்திற்கு தண்ணீர் ஊற்றத் தெரியாதவர்கள்
    இலங்கையில் உள்ளார்கள்....!!!

    Reply : 0       0

    Ashraff Ameen Monday, 12 November 2012 07:18 AM

    இவன் ஒரு சாதனையாளன் மட்டுமே. உனது திறமை மேலும் வளர என் வாழ்துக்கள். இதேபோல் எத்தனை சாதைனையாளர்கள் நம் நாட்டில் மூலை மூடுக்குகளில் இருப்பார்கள்.

    Reply : 0       0

    Niyas Monday, 12 November 2012 09:09 AM

    Vaalthukkal Senthooran.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X