2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொற்றாளர் எண்ணிக்கை 1,141ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 மே 24 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
நேற்றைய தினம் 52 பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

................................................................................

இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,140ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 674 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இனங்காணப்பட்ட 51 பேரில் 49 பேர் குவைட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பவர்களெனவும் ஒருவர் இந்தோனேஷியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் முகாமில் இருப்பவரெனவும் ஒருவர் கடற்படை வீரரெனவும் சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .