2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நான்காவது சுற்றில் கரோலினா பிளிஸ்கோவா

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று (04) இடம்பெற்ற, பெண்களுக்கான தனிநபர் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, ஆறாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் வெற்றிபெற்று, நான்காவது சுற்றுக்குச் சென்றுள்ளனர்.

செக் குடியரசின் பிளிஸ்கோவா, 7-5, 6-1 என்ற நேர் செட்களில், ஜேர்மனியின் கரினா விட்டஃவ்ட்டை வென்றார். 

உக்ரேனின் எலினா ஸ்விட்டொலினா, 6-4, 7-5 என்ற நேர் செட்களில், போலந்தின் மகடா லினெட்டை வென்றார்.  

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான, ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்ஸோவா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 1-6, 6-4, 2-6 என்ற செட்களில், சுவிற்ஸர்லாந்தின் கரோலின் வொஸ்னியாக்கியிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், 9 தடவைகள் பிரெஞ்சுப் பகிரங்கச் சம்பியனான, ஸ்பெய்னின் ரஃபேல் நடால், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில், சக ஸ்பானிய வீரரான றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்டை வென்று, காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.   

இதேவேளை, நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற, ஆண்களுக்கான தனிநபர் மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் வெற்றிபெற்ற, உலகின் முதல்நிலை வீரரான அன்டி மரே, நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.  

ஐக்கிய இராச்சியத்தின் அன்டி மரே, 7-6 (10-8), 7-5, 6-0 என்ற நேர் செட்களில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோவை வென்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X