Niroshini / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
ஏறாவூரில் தாய்ப் பால் புரைக்கேறியதால், பிறந்து 33 நாட்களான சிசுவொன்று, நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவத்தனர்
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி தாமோதரம் வீதியைச் சேர்ந்த ரஜனிக்காந் சுஜித் எனும் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த சிசுவின் வாயின் மேல் உதட்டில் சிறிது காயத்துடன் பிறந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு தாயார் அக்குழந்தைக்கு பால் அருந்தக்கொடுத்துவிட்டு உறங்க வைத்துவிட்டு முதலாவது பிள்ளைக்கு இரவு உணவு கொடுத்து வந்து பார்க்கும் போது சிசு மூச்சு எடுப்பதில் அவதியுற்ற நிலையில் காணப்பட்டுள்ளது.
உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்துச்சென்ற போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.
51 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago