எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 மார்ச் 15 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், மட்டக்களப்பில் இன்று (15) வரை ஒரேயொரு சுயேட்சைக் குழுவே வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.
புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது தம்பி உவைஸ் தலைமையிலான சுயேற்சைக்குழுவே நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
வேட்புமனுத் தாக்கலையொட்டி, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம் 19ஆம் திகதி நண்பகளுடன் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் காலம் நிறைவடையவுள்ளதால் அடுத்தடுத்த தினங்களில் பிரதான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
13 minute ago
31 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
58 minute ago