2025 ஜூலை 09, புதன்கிழமை

இராணுவ முகாமில் உள்ள கணவரை விடுவிக்காவிடின் தற்கொலை செய்வேன்: நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்ச

Super User   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

எனது கணவர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாமொன்றில் கை கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளார். எனது கணவரை இராணுவம் விடுதலை செய்யாவிடில் நானும் எனது பிள்ளைகளும் தீக்குழித்து தற்கொலை செய்து கொள்வேன் என காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சகாயமணியின் மனைவி, ஜோசப் மேரி சகாயமணி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில்  இன்று சாட்சியமளித்த போது தெரிவித்தார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது இவர் மேலும் தெரிவித்ததாவது,

எனது கணவர் மட்டக்களப்ப மாநகர சபையின் ஒரு உறுப்பினர். கடந்த 23.8.2010ஆம் திகதி கானாமல் போனார். இவரை மட்டக்களப்பிலுள்ள இராணுவத்தினர் வெள்ளை வானில் கடத்திச் சென்றதாக அறிகின்றேன்.எனது கணவரை மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாமில் கை கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் இராணுவத்தினர் வைத்துள்ளனர்.

தயவு செய்து அவரை விடுவிக்க உதவுங்கள். இல்லையேல் நானும் எனது பிள்ளைகளும் தீக்குளித்து உயிரை மாய்க்க வேண்டி ஏற்படும். எனது கணவர் குற்றம் செய்திருந்தால், நீதிமன்றத்தினூடாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.

எனது கணவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒரு அங்கத்தவர். அரசாங்கம் நினைத்தால் எனது கனவரை விடுவிக்கலாம். தயவு செய்து விடுவிக்க உதவுங்கள் என்றார்.

அப்போது "உங்கள் கணவரை இராணுவம் கடத்திச் சென்றதை எப்படி நீங்கள் அறிந்தீர்கள்" என ஆணைக்குழு உறுப்பினர்கள் கேட்டனர்.
 
எனக்கு இராணுவம் தான் எனது கணவரை கடத்திச் சென்றார்கள் எனும் தகவல் கிடைத்துள்ளது. அதை நான் நன்கு அறிவேன் என காணமால் போயுள்ள  மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சகாயமணியின் மனைவி ஜோசப் மேரி சகாயமணி கூறினார்.

ஜோசப் மேரி சகாயமணி தனது இரண்டு குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொண்டே, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .