2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உலக உளநல தினத்தையொட்டி வீதி நாடகங்கள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

உலக உளநல தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை வைத்தியசாலை உளநலப் பிரிவும், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலை துறையினரும் மனிதநேயம் எனும் தலைப்பில் வீதி நாடகங்களை நடத்தி வருகின்றனர்.


இந்த மாதம் 25ஆம் திகதி முதல் கிரான், வந்தாறுமூலை, வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு, கதிரவளி, வாகரை, சித்தாண்டி ஆகிய இடங்களில் வீதி நாடகங்களை நடத்தியதுடன், இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பொதுச்சந்தைக்கு முன்பாக வீதி நாடகத்தை நடத்தினர்.


இந்நாடகத்தினை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலை பிரிவு விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரன் நெறியாள்கை செய்துள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X