Menaka Mookandi / 2010 நவம்பர் 12 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் சமுதாயச் சீர்திருத்த திணைக்களத்தின் அலுவலகமொன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகரவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இக்காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.எல.ஏ.மனாப் மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வி.ராமகமலன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம், திணைக்களத்தின் பணிப்பாளர் லலித் வீர உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிறுகுற்றம் செய்பவர்கள் தொடர்பில் அவர்களை புனர்வாழ்வளிக்கும் காரியாலயமாக இவ்வலுவலகம் செயற்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் லலித் தெரிவித்தார்.

25 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
48 minute ago