2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ சத்திசாயி சேவா ஆரையம்பதி நிலையத்திற்கு நிரந்தரக்கட்டிடம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

பகவான் ஸ்ரீ சத்திசாயி சேவா ஆரையம்பதி நிலையத்திற்கு நிரந்தரக்கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று வியாழக்கிழமை காலை நாட்டி வைக்கப்பட்டது.

53 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நிலையத்தின் தலைவரும் ஆரையம்பதி மத்தியஸ்த்த சபையின் தலைவருமான எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு விஷேட பூசை நடத்தப்பட்டு இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .