2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்பு

Super User   / 2011 ஜனவரி 14 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் ஒருவனின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த சிறுவன் நேற்று வியாழக்கிழமை மாலை அவரது வீட்டிற்குப் பக்கத்திலுள்ள சிறிய பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்தபோது, தவறி வீழ்ந்ததில்  வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போனான்.

ஏறாவூர் முனையளவு வீதியிலுள்ள ஜௌபர் முகம்மது சுஐப் (வயது 9) என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் ஆவர்.  
குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .