Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 20 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.லோஹித்)
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி பொலிஸில் சரணடைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சரணடைந்த பிரசாந்தனும் மற்றும் 5 பேரும் இன்று மட்டக்களப்பு நீதவான் என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல பிரசாந்தனுக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.
ஏனைய 5 பேரையும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு அவர் உத்தரவு வழங்கினார்.
ஆரையம்பதி பிரதேச செயலாளரை அச்சுறுத்தியமை, கிராம சேவையாளர் சுரேஷை அச்சுறுத்தியமை, ஆரையம்பதி பிரதேச செயலக ஊழியர் பைரூஸை தாக்கியமை ஆகிய 3 குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி யூ.அப்துல் நஜீம் ஆஜராகியிருந்தார்.
23 minute ago
48 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
48 minute ago
50 minute ago