Super User / 2011 மார்ச் 04 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நாடு பூராவும் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு மில்லியன் வீட்டுத்தோட்ட செய்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் எம்.நடேசராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்தோட்ட திட்டம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago