Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
உலகளாவிய இரத்த நன்கொடையாளர் தினம் எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வொன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் இரத்ததான செயலணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை மட்டு. செல்வநாயகம்; ஞாபகார்த்த மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
உயிர் காக்கும் உன்னத பணியில் சுகதேகியான 18 தொடக்கம் 50 வயதிற்குட்பட்டவர்கள் இணைந்து இரத்ததானம் வழங்கலாமென மட்டக்களப்பு போதனா வைத்தயசாலையின் இரத்த வங்கிப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .