Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான பசீர் சேகுதாவூத், விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் திவிநெகும, மற்றும் நெல்சிப் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விஷேடமாக ஆராயப்பட்டன.
இவ்வாண்டு அபிவிருத்திக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3560 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 2200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago