S.Renuka / 2026 ஜனவரி 12 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, “தனி உரிமையை பாதுகாக்கும் வகையில், நீயே விடை நிறுவனம் மட்டுமல்லாமல், வேறு எந்த நிறுவனங்களும், தனது பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனுமதின்றி, வர்த்தக ரீதியில் நடிகர் கமலின் பெயர், புகைப் படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தும் மனுவுக்கு பதிலளிக்கும்படி, ”நீயே விடை” நிறுவனத்துக்கு உத்தரவிட்டும் விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தார்.
அதே சமயம், கார்ட்டூன்களில் நடிகர் கமல் படத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்பதை விளக்கிய நீதிபதி, வேறு எவரும் அனுமதின்றி தனது புகைப்படம், பெயரை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் கிடைத்த உத்தரவு குறித்து தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட கமல் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago