2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தரம் 1இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
 
வேள்ட்விஷன் (உலக தரிசனம்) லங்கா கிரான் ஏடிபி; நிறுவனம் இந்த மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்தது. 10 பாடசாலைகளைச் சேர்ந்த 197 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் வேள்ட்விஷன் முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன்,  மட்டு. சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர், மட்டு. கிரான் விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X