Super User / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: திருவருள் துரைராசசிங்கம்
பன்னாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருவருள் துரைராசசிங்கம் 03.09.2010 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திருவருள் சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும் சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும் பார்த்தீபன், அருளினி(லண்டன்), அஜந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கவிதா, சந்திரகாந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குலசிங்கம், தருமகுலசிங்கம், பரராசசிங்கம் மற்றும் விஜயசிங்கம், ஜெயசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் லக்சனா (லண்டன்), சர்சனா (லண்டன்), தினோஜன், துளசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.09.2010 சனிக் கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:து. பார்த்தீபன் (மகன்).
பன்னாலை,
தெல்லிப்பழை.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago