Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: தம்பிப்பிள்ளை நாகேந்திரம்
டச்சு வீதி, உடுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நாகேந்திரம் (ஓய்வுபெற்ற வருமானவரி மேற்பார்வையாளர், பிரதேச சபை, சுன்னாகம்) 27.10.2010 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - சின்னத்தங்கச்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் அன்னபூரணம் தம்பதியரின் பாசமிகு மருமகனும், தேவநாயகியின் அன்புக் கணவரும், நவநீதன் (Engineer, SLT யாழ்ப்பாணம்), நவதாசன் (D.A. பிரதேச செயலகம், கோப்பாய்), நவரூபன் (Engineer, London) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், அருந்ததி, தயாழினி, துஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும், சண்முகநாதன், பஞ்சநாதன், நவீனச்சந்திரன், இராசேந்திரன், கஜநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், திருமதி பிலிப்பானந்தம், மகாலக்சுமி, மதிவதனி, இராசலட்சுமி, தவாம்பிகை, மனோரஞ்சினி மற்றும் விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், துஷாயினி, தக்ஷாயினி, ஷஜீவன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.10.2010) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரின் இல் லத்தில் நடைபெற்று பூதவுடல் பூவோடை இந்துமயானத் தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்.
டச்சுவீதி, உடுவில்,சுன்னாகம்.
29 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago