Sudharshini / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, உடதும்பறை பிரதேச செயலக பிரிவிலுள்ள 9 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நன்மைக் கருதி 120 இலட்சம் ரூபாய் செலவில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளின் தாக்குதலிலிருந்து இம்மக்களை மீட்பதற்காகவே இம்மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இம்மின்வேலி இன்று (28) காலை திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .