2026 ஜனவரி 03, சனிக்கிழமை

விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதுளை, பசறை பகுதியில், நேற்று (06) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்கவும் அரச வேலைவாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஊவா மாகாண முன்னாள் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் எந்தவிதத் தடைகளும் இன்றி நடைபெறவேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், இறந்தவர்களின் உறவினர்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X