Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
பல்கலைக்கழக மாணவர்களின் சத்தியாகஜரக மேடை இனந்தெரியாதோரால் நேற்று சனிக்கிழமை இரவு உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்ததாக சத்தியாகிரக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயாக்காவுக்கு இடையூறு ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களை விடுதலை செய்யக்கோரி பேராதனை, கலஹா சந்தியில் விஷேட மேடையொன்றினை பல்கலைக்கழக மாணவர்கள் அமைத்துள்ளனர்.
இம்மேடையில் கடந்த 11ஆம் திகதி முதல் மாணவர்கள் பத்துப் பத்துப் பேர்களாக சத்தியாக்கிரகம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்றிரவு மாணவர்கள் இல்லாத வேளையில் இனந்தெரியாதோரால் இம்மேடை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்ததாக இம்மாணவர்கள் விசனம் தெரிவித்தனர்.
26 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
31 minute ago