Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(எஸ்.சுவர்ணஸ்ரீ)
	
	நுவரெலியா நகரப்பகுதிக்கு வருகின்ற உல்லாச பயணிகளால் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வீசப்படுகின்ற கழிவுப் பொருட்களால் பொது சுகாதாரத்துக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
	
	வாரயிறுதி நாட்களில் தொடர்ச்சியான விடுமுறை நாட்களின் போது நுவரெலியா நகரக்கு பெரும் எண்ணிக்கையான உல்லாச பயணிகள் வருகை தந்திருந்ததாகவும் இவர்கள் பாவித்த பல்வேறு பொருட்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் கட்டுபாடின்றி விசப்பட்டிருந்தாகவும் இதனால் நகரின் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
	 
	எனவே நுவரெலியா நகருக்கு வருகின்ற உல்லாச பயணிகள் கழவுப்பொருட்களை பொது இடங்களில் வீசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென நுவரெலியா மாவட்டச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
22 minute ago
1 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
30 Oct 2025