Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஜனவரி 30 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தல் காலங்களில் சமுர்த்தி பயனாளிகளுக்கு திவிநெகும திட்டத்தின் கீழ் பகிந்தளிக்கபடவிருந்ததாக கூறப்படும் பொருட்களில் ஒரு தொகை கொத்மலை பிரதேச காரியாலய கட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அவரச தொலைப்பேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பொருட்கள் நேற்று மீட்கப்பட்டன.
அவை, நுவரெலியா மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரியான ஜி.விமலதாச – (பிரதி பொலிஸ் மா அதிபர்) தலைமையில் குழவினரால் இன்று வெளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது.
இதன் போது நுவரெலியா மாவட்ட திவிநெகும பனிப்பாளர் திருமதி ஏயரத், திவிநெகும அதிகாரிகள் கொத்மலை பிரதேச காரியாலய அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.
இதன் போது 120 ஜூகி மெசின்கள், 03 நீர் இறைக்கும் பம்பி, 08 தற்காலிக கூடாரங்கள் மீட்டகப்பட்டன. இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025