2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட பொகவந்தலாவ கெர்கசோல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தினால் நிவாரண பொதிகள், இன்று(8) வழங்கி வைக்கப்பட்டன. 

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக,  பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனியும, இணைந்து 3,000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருள்கள் அடங்கிய பொதியை வழங்குவதாக அறிவித்திருந்தது.

குறித்த பொதியில்,  வெங்காயம், சீனி, உருளைக் கிழங்கு, நெத்திலி, அரிசி, கோதுமை மா ஆகிய அத்தியாவசிய பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .