Lenin Raj / 2026 மார்ச் 19 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (19) பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் மாணவர் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெறும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் மீதான பொலிஸ் விசாரணைகள் நிறுத்தப்பட்டு, அவை பல்கலைக்கழக நிர்வாக மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படக் கூடாது.
விசாரைணக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ள எமது மாணவர்கள் திரும்பி வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல்கலைக்கழகப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதுடன், மாணவர்களின் இந்த ஜனநாயகப் போராட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
26 minute ago
41 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
41 minute ago
41 minute ago