Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்னகிரி தோட்டத்தில் மண் மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஆறுமுகம் சுகுமார் (வயது 4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
லிந்துலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பெய்த மழை காரணமாக திடீரென மண் மேடு சரிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் மீது வீழ்ந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் லிந்துலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
1 hours ago