Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடக்கு மாகாணத்தில், கடந்த மூன்று ஆண்டுகளை விட கடந்தாண்டு, எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, சுகாதாரப் பிரிவின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2016இல் 99 பேரும் 2017இல் 108 பேரும் 2018இல் 102 பேரும் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டு டிசெம்பர் மாத நிறைவில், 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்திலேயே, எலிக் காய்சலின் பாதிப்பு அதிகமாகவுள்ளது. இதற்கமைய, கடந்தாண்டு 58 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.
அத்துடன், யாழ்பாணம் மாவட்டத்தில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago