Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 30 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
நல்லூர், கல்வியங்காடு யமுனா வீதியிலுள்ள காணியொன்றில் புதையுண்ட நிலையில், மீட்கப்பட்ட 3 பரல் வெடிபொருட்கள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (29) செம்மணிப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் அழிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் காணியொன்றை புதிதாக வாங்கிய ஒருவர் அந்தக் காணியில் கிணறு ஒன்றை தோண்டியபோது, வெடிமருந்துகள் உள்ளடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பரல் ஒன்றை கண்டு, கிராமஅலுவலர் ஊடாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்துக்குச் சென்று அங்கு புதையுண்ட நிலையில் இருந்த 3 பரல்களை மீட்டனர். தொடர்ந்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு, பரல்களில் இருந்த வெடிமருந்துகள் செம்மணியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் அழிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago