2026 மார்ச் 25, புதன்கிழமை

“நான் ஏன் பயப்படணும்?”: விஜய்யின் பேச்சால் பரபரப்பு

S.Renuka   / 2026 மார்ச் 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து செய்யப்போவதாகச் கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன. 

இந்தச் சூழலில், சங்கீதா உடனான தனது திருமணம் குறித்து விஜய் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், "நான் ஏன் பயப்படணும்? சங்கீதா என் அப்பா, அம்மா பார்த்து நிச்சயம் செய்த பொண்ணுதான். லண்டனில் இருந்து வந்து என்னை சந்தித்த அவர், எனது தீவிர ரசிகையாக இருந்தார். பிறகு பெரியவர்கள் சம்மதத்துடன் எங்களுடைய திருமணம் முறைப்படி நடைபெற்றது" என்று விஜய் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

விஜய்யின் இந்த பழைய வீடியோ தற்போது வைரலாவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. நடிகை திரிஷாவுடன் விஜய்யை இணைத்து அண்மைக்காலமாகப் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் ஒரு நடிகையுடனான தொடர்பு பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் 2026 பிப்ரவரி இறுதியில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்தச் சூழலில், விஜய்யின் இந்த த்ரோபேக் வீடியோ, அவர் தனது மனைவி மீது வைத்திருந்த மரியாதையையும், அவர்களது திருமணத்தின் அடித்தளத்தையும் ரசிகர்களுக்கு நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியும் கவனத்தைப் பெற்றுள்ளது. 

தனது மருமகள் சங்கீதா மிகவும் கண்டிப்பானவர் (Strict) என்றும், குடும்பத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி வந்தவர் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விரிசல், விஜய்யின் அரசியல் வருகைக்கு ஒரு சவாலாக அமையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ விவாகரத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோரின் எதிர்காலத்தைக் கருதி, குடும்பத்தினர் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

த்ரிஷா தரப்பிலிருந்து இத்தகைய வதந்திகளுக்குப் பலமுறை முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட போதிலும், பொதுவெளியில் நிலவும் விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்தத் த்ரோபேக் வீடியோவின் மூலம், தனது குடும்ப வாழ்க்கையை எவ்வளவு கண்ணியமாக விஜய் தொடங்கினார் என்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, வதந்திகளுக்குத் திரை போட முயற்சித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .