Editorial / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாவட்டத்தை மய்யமாகக்கொண்டு விசேடபொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்புவோமெனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அங்கு நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,
இதன்போது மேலும் தெரிவித்த அவர், யுத்தக் காலத்துக்குப் பின்னர் வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் அபிவிருத்தியடைந்தாலும், யாழ்ப்பாணம் அபிவிருத்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டுமென 2015ஆம் ஆண்டே தாம் தீர்மானித்தாகவும் கூறிய அவர், இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாணம் முக்கியமான நகரமெனவும் நல்லூர் நகரே தமிழ் மக்களின் கேந்திர நிலையம் எனவும் கூறியுள்ளார்.
1 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
01 Jan 2026