Suganthini Ratnam / 2011 ஜனவரி 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் பயணித்த வாகனங்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு படையினரால் சோதனையிடப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் பயணித்த அனைத்து வாகனங்களும் இணுவில் வைத்தியசாலைக்கு முன்பாக இடைமறிக்கப்பட்டதுடன், வாகனங்களில் பயணித்தவர்கள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் அரச அலுவலர்கள் உரிய இடங்களுக்கு செல்வதில் சற்று நேர தாமதமானது.
நேற்று திங்கட்கிழமை இரவு மானிப்பாயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
10 minute ago
12 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
19 minute ago
1 hours ago