Super User / 2010 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
கசிப்பு உற்பத்தி செய்வதற்கென கோட வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நபருக்கு 3 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகத்தைச் சேர்ந்த இந்த நபரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நேற்று யாழ். நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கினை விசாரணை செய்த யாழ். நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு 3 லட்சம் ரூபா அபராதம் விதித்ததுடன் அதனைச் செலுத்தத் தவறின் ஒரு வருட காலத்துக்கு சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago