2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லண்டனில் இருந்து வந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் .ராஜ்

லண்டனில் இருந்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே, இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், லண்டன் நாட்டிலிருந்து வருகை தந்த அவர், அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில், அவரது உறவினர்கள் ஊடாக , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .