2025 ஜூலை 05, சனிக்கிழமை

புத்தளம் கொழும்பு புகையிரதச் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம் கொழும்பு புகையிரதச் சேவை இன்று சனிக்கிழமை வழமைக்குத் திரும்பியுள்ளது. புத்தளத்திலிருந்து சிலாபம் செல்லும் புகையிரதச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை இரவு 9.15 மணியளவில் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி வந்த புகையிரதத்தின் என்ஜின் உட்பட இரண்டு பிரயாணிகள் பெட்டிகள்  பாலாவி புகையிரத நிலையத்திற்கருகில் பாதையை விட்டு விலகி தடம் புரண்டதையடுத்து  இப்புகையிரதப் பாதையில் புகையிரதச்  சேவைகள் நேற்று முழுதும் பாதிப்படைந்திருந்தன.

இதனால் கொழும்பிலிருந்து புத்தளத்திற்கான புகையிரதச் சேவைகளும் சிலாபம் பங்கதெனி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .