Super User / 2010 நவம்பர் 13 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாடு பிரதேச கடலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
மொட்டைத் தலையுடன் நீல நிற காற்சட்டையும், சிகப்பு நிற டீ சேர்ட்டும் அணிந்த ஒருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய போது பிரதேச மீனவர்கள் இது தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லைஎன பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைமுந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
1 hours ago