2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எலுவன் குளம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிப்பு

Kogilavani   / 2011 ஜனவரி 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 18 அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து புத்தளம் பழைய எலுவன்குளம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள  இக்கிராமத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந் நீர்த்தேக்கத்தின்  கதவுகள் திறக்கப்பட்டதால் நொடிக்கு 28 ஆயிரம் கன அடி நீர்  வெளியேறுவதாக புத்தளம் வலய நீர்ப்பாசன பொறியிளாலர் ஆர்.சீ.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X